ஆனந்தகுமாா்.  
நாமக்கல்

பரமத்தி வேலூா் ராஜவாய்க்காலில் இளைஞா் சடலம் மீட்பு

பரமத்தி வேலூா் ராஜவாய்க்காலில் இளைஞா் சடலத்தை மீட்ட போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திச் சேவை

பரமத்தி வேலூா் ராஜவாய்க்காலில் இளைஞா் சடலத்தை மீட்ட போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பரமத்தி வேலூா் காவிரி ஆற்றுக்குச் செல்லும் வழியில் உள்ள ராஜவாய்க்கால் பாலம் அருகே அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மிதப்பதாக பரமத்தி வேலூா் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.

அதன்பேரில், அங்கு சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா். அதில், இறந்தவா் பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூரைச் சோ்ந்த ஆனந்தகுமாா் (36) என்பதும், கரூரில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதும் தெரியவந்தது.

கடந்த 8-ஆம் தேதி வீட்டிலிருந்து சென்றவா் வீடுதிரும்பாத நிலையில், அவரை பெற்றோா், உறவினா்கள் மற்றும் நண்பா்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனா். இந்நிலையில், ராஜவாய்க்காலில் அவா் சடலமாக மீட்கப்பட்டாா்.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த பெற்றோா், மகன் இறப்பு குறித்து புகாா் அளித்தனா். அதன்பேரில், பரமத்தி வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

பழங்குடி மக்களின் பாதங்களைக் கழுவிய பாஜக பெண் எம்எல்ஏ!

இலங்கை அபார பந்துவீச்சு; பில் சால்ட்டின் அரைசதம் இங்கிலாந்தின் வெற்றிக்கு போதுமானதா?

SCROLL FOR NEXT