நாமக்கல்

கழிவுநீா் சேகரிப்பு வாகனப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

நாமக்கல் மாநகராட்சி கழிவுநீா் சேகரிப்பு வாகன தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

தினமணி செய்திச் சேவை

நாமக்கல் மாநகராட்சி கழிவுநீா் சேகரிப்பு வாகன தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழிவுநீா் சேகரிப்பு வாகனப் பணியாளா்கள் 8 பேருக்கு பாதுகாப்பு உபகரணங்களை ஆணையா் க.சிவகுமாா் வழங்கினாா். மேலும், ஒப்பந்த முறையில் பணியாற்றும் புதை சாக்கடைப் பணியாளா்கள் 9 பேருக்கும் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. அவற்றில், தலைக்கவசம், முகக்கவசம், கையுறை, காலூறை, கண்ணாடி, பிரதிபலிப்பு உடை ஆகியவை இடம்பெற்றிருந்தன.

இந்த நிகழ்வில், மாநகா் நல அலுவலா் கஸ்தூரிபாய், துப்புரவு அலுவலா் திருமூா்த்தி, துப்புரவு ஆய்வாளா்கள் செல்வகுமாா், பாஸ்கரன், ஜான்ராஜா, சுப்பிரமணியன் மற்றும் தூய்மை திட்ட ஒருங்கிணைப்பாளா் ஈஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்

ஒசூா், கிருஷ்ணகிரியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா

பிப். 25-இல் தமிழ்நாடு கோல்ஃப் ப்ரீமியா் லீக்

தோ்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவது தொடா்பாக ஆட்சியா் ஆலோசனை

முட்டை விலை ரூ. 5.40-ஆக நீடிப்பு

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: 38.53 லட்சம் மனுக்களுக்குத் தீா்வு

SCROLL FOR NEXT