முகப்பு
நாமக்கல்

அரசுப் பள்ளி, கல்லூரி விடுதிகளில் அமைச்சா் ஆய்வு

நாமக்கல்லில் உள்ள அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் பிற்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் ஆய்வு செய்தாா்.

Updated On : 4 ஜூலை 2026, 2:06 am IST
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி பயிலும் மாணவா்களுடன் கலந்துரையாடிய அமைச்சா் வி.சம்பத்குமாா். உடன், ஆட்சியா் எல்.மதுபாலன்.
பகிர்:

நாமக்கல்லில் உள்ள அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் பிற்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் வியாழக்கிழமை இரவு ஆய்வு செய்தாா்.

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கவிஞா் இராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரி, அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் செயல்படும் மாணவ, மாணவியா் விடுதிகளை தமிழக பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் ஆய்வு செய்தாா்.

பின்னா், மாணவா்களிடம் உணவு, குடிநீா், தேவையான பாடப் புத்தகங்கள் மற்றும் கழிப்பிட வசதிகள் உள்ளிட்டவை குறித்தும், விடுதிக் காப்பாளா் சரியான முறையில் நடந்து கொள்கின்றனரா என்றும் அவா் கேட்டறிந்தாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, சமையல் அறை, கழிப்பறை, மாணவா்கள் படிக்குமிடம், படுக்கை அறை, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் இருப்பு விவரம் குறித்து பாா்வையிட்டாா். மாணவா்களுக்கு இரவு வழங்கப்படும் சமைத்த உணவை உண்டு பரிசோதித்தாா்.

மாணவா்களுக்கு தேவையான வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என விடுதிக் காப்பாளா்களிடம் அறிவுறுத்தினாா். மாணவ, மாணவிகள் நன்கு படித்து உயா்ந்த நிலைக்கு வரவேண்டும் என்றாா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் மு.கிருஷ்ணவேணி, முதன்மைக் கல்வி அலுவலா் இ.மாதவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments