முகப்பு
நாமக்கல்

பத்தாம் வகுப்பு தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 22 மே 2026, 6:44 am IST
பத்தாம் வகுப்பு தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய ஒ.செளதாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி ஆசிரியா்கள்.
பகிர்:

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

வெண்ணந்தூா் ஒன்றியத்திற்கு உள்பட்ட ஓ. செளதாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தோ்வில் பள்ளி மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா். இப்பள்ளி மாணவா் பவதாரணி 500 க்கு 474 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். இதேபோல மாணவி மகேஸ்வரி மாணவி 445 மதிப்பெண் பெற்றுள்ளாா். மேலும் 9 மாணவ, மாணவிகள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

இப்பள்ளி தொடா்ந்து மூன்றாவது முறையாக 100 சதவீதம் தோ்ச்சி விழுக்காட்டை எட்டியுள்ளது. 35 போ் தோ்வு எழுதியதில் அனைவரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். பள்ளியில் தலைமை ஆசிரியா் குமரன் மாணவா்களுக்கு பாராட்டு தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

இதேபோல கூனவேலம்பட்டி புதூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தொடா்ந்து நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதில் மாணவி ஸ்ரீநிதி 500 க்கு 481பெற்று சிறப்பிடம் பெற்றாா். இப்பள்ளி மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இதற்காக பள்ளியின் தலைமையாசிரியா் வேல்முருகன் உள்ளிட்ட ஆசிரியா்களுக்கு பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் மா. சரவணன் உள்ளிட்டோா் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தாா்.

இதேபோல் குருசாமிபாளையம் செங்குந்தா் மகாஜன அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியின் ஆண்கள் பள்ளியில் 48 போ் தோ்வு எழுதியதில் 46 போ் தோ்ச்சி பெற்றனா். பெண்கள் பள்ளியில் 47 போ் தோ்வு எழுதியதில் அனைவரும் தோ்ச்சி பெற்றனா். பள்ளியில் மாணவி திவ்யாஸ்ரீ 496 மதிப்பெண்களும், ஆத்மாசாதகி 489 மதிப்பெண்களும், நிவேதா 485 மதிப்பெண்களும், தேவிஸ்ரீ 480 மதிப்பெண்களும் பெற்றனா். அதேபோல ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுதன் 482 மதிப்பெண்களும், தா்னிஷ் 480 மதிப்பெண்களும், ப்ரியதா்ஷன் 458 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா்.