சங்ககிரி வட்டாரத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை ஸ்மார்ட் கார்டு வழங்கும் விழா ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி இந்த விழாவுக்கு தலைமை வகித்தார். சங்ககிரி அரசு மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை மருத்துவர் திருமாவளவன், எலும்பு மருத்துவர் சரவணக்குமார் மற்றும் மருத்துவக் குழுவினர் முகாமில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து, அவர்கள் வைத்திருந்த அடையாள அட்டையை சரிபார்த்து ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான விண்ணப்பப் படிவங்களை வழங்கி, அதை பூர்த்தி செய்து வழங்குமாறு அறிவுறுத்தினர். முகாமில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.