சேலம்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஆத்தூரில் இன்று இலவச மருத்துவ முகாம்

தினமணி

கெங்கவல்லி ஒன்றியத்திலுள்ள மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியருக்கு இலவச மருத்துவ முகாம், அடையாள அட்டை வழங்க பரிசோதனை முகாமும் திங்கள்கிழமை (ஜூலை17) ஆத்தூர் அரசு மருத்துவமனையில் நடைபெற உள்ளது.
 இதுகுறித்து கெங்கவல்லி வட்டார அனைவருக்கும் கல்வி இயக்க மேற்பார்வையாளர்(பொறுப்பு) சுஜாதா கூறியதாவது:
 கெங்கவல்லி வட்டாரத்திலுள்ள மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியருக்கு திங்கள்கிழமை காலை 9.30 முதல் பிற்பகல் 2 மணி வரை ஆத்தூர் அரசு மருத்துவமனையில் 0 வயது முதல் 18 வயதுக்குள்பட்ட மாற்றுத்திறன் கொண்டோருக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.
 இம்முகாமில் பார்வையற்றோர், செவித்திறன் குறையுடையோர் , மனவளர்ச்சி குன்றியோர், கை, கால் ஊனமுற்றோர், பேச்சுக்குறைபாடு உடையோர் போன்றோர் பங்கேற்று, தங்களுக்கு தேசிய அடையாள அட்டை , உதவி உபகரணம், அறுவைச் சிகிச்சைக்கு தேர்வுக்கு தேர்வு பெறுதல் ஆகிய பயன்களை பெறலாம். அடையாள அட்டையுள்ள மாணவர்கள் இம்முகாமில் கலந்து கொள்ளத் தேவையில்லை. மாற்றுத்திறனாளி மாணவர்கள் முகாமிற்கு வரும்போது, குடும்ப அட்டை நகல் , ஆதார் அட்டை நகல், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களைக் எடுத்து வர வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT