மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால், அணையின்நீர் மட்டம் 1.80 அடி சரிந்தது.
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்தது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக சரிந்து வியாழக்கிழமை காலை அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 5,799 கனஅடியாக இருந்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 20 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், செவ்வாய்க்கிழமை காலை 97.85 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர் மட்டம் வியாழக்கிழமை காலை 96.05 அடியாக சரிந்தது.
இரு நாள்களில் அணையின் நீர் மட்டம் 1.80 அடி சரிந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 59.84 டி.எம்.சி.யாக இருந்தது.