சேலம்

மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் கைது

DIN

எடப்பாடி அருகே 10 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
எடப்பாடி  ஆலச்சப்பாளையம் பகுதியைச்  சேர்ந்த நாராயணன் மகன் முருகன் (25). கட்டடத் தொழிலாளி.  இவர் வெள்ளிக்கிழமை அப்பகுதியில் உள்ள பொதுக் கழிப்பிடம் அருகே நடந்து சென்ற 10 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி சத்தமிட்டுள்ளார். இதையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்து மாணவியை மீட்டதுடன்,  முருகனை பிடித்து எடப்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT