சேலம்

கெங்கவல்லியில் கல்விச் சீர் வழங்கும் விழா

DIN

கெங்கவல்லி பேருராட்சியின் 10-ஆவது வார்டு  அரசு நடுநிலைப் பள்ளியில் கல்விச் சீர் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஊர் பொதுமக்கள் பள்ளிக்காக தண்ணீர் டிரம், பாய்கள், விளையாட்டுப் பொருள்கள், கல்வி உபகரணங்கள், பிளாஸ்டிக் குடங்கள், நாற்காலிகள் என ரூ.9 ஆயிரத்திலான பொருள்களை மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்து பள்ளிக்கு வழங்கினர்.
வட்டாரக் கல்வி அலுவலர் அந்தோணி முத்து தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சீனிவாசன் வரவேற்றார். இதில், பிடிஏ தலைவர் சடையன், ஆசிரியப் பயிற்றுநர்கள் பாலமுருகன், செல்வராஜ், டி.சுப்பிரமணியன், பி.சுப்பிரமணியன், ஊர் முக்கியப் பிரமுகர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்றனர். வேல்முருகன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

SCROLL FOR NEXT