சேலம்

நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு விழா

DIN

சங்ககிரி தனியார் மகளிர் கலை மற்றும் அறிவியல்  கல்லூரியின் சார்பில்  சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தேவண்ணகவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சங்ககிரி தனியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ஆ.சுரேஷ் நிறைவு விழாவிற்கு தலைமை வகித்தார். கல்லூரி இயற்பியல்துறை  பழனிசாமி வரவேற்றார். தேவண்ணகவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கணித பட்டதாரி ஆசிரியர் ஆர்.முருகன் பேசினார். நாட்டுநலப்பணிதிட்ட அலுவலர் ஆர்.அன்புமலர் நன்றி கூறினார். முகாமில் வாக்காளர்களின் கடமை, டெங்கு விழிப்புணர்வு, யோகா செய்வதன் அவசியம், மழை நீர் சேகரிப்பு, பெண் கல்வி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை விளக்கிக் கூறப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT