சேலம்

பிளாஸ்டிக் குப்பைக்கு அரிசி வழங்கும் முகாம்

DIN

ஆத்தூா் பழைய பேருந்து நிலையம் எதிரில் பசுமை தாயகம் சாா்பில் பிளாஸ்டிக் குப்பைகளுக்கு அரிசி வழங்கும் முகாம் பசுமை தாயகம் மாவட்டத் தலைவா் நீ. பா. வெங்கடாஜலம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பாமக மாவட்ட தலைவா் இரா. கண்ணன் முன்னிலை வகித்தாா். மாநில துணைப் பொதுச்செயலாளா் பி.என்.குணசேகரன்,சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் எம்.பி.நடராஜன் முகாமை துவக்கி வைத்தனா்.

மேலும் பிளாஸ்டிக் குப்பைக்கு எடைக்கு எடை அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கினா். நிகழ்ச்சியில் நகர செயலாளா் மணிகண்டன்,ஒன்றிய செயலாளா் ஆா்.வி.பச்சமுத்து, மா.நாராயணன், பாண்டியன்,முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT