சேலம்

மாநில பாதுகாப்பு, சிறந்த பணியாளர்களுக்கான விருதுகளை சேலம் உருக்காலை வென்றது

DIN

சேலம் உருக்காலை மாநில பாதுகாப்பு மற்றும் சிறந்த பணியாளர்களுக்கான விருதுகளை வென்றது.
தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் வரும் தொழிலகங்களில் சிறந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும், நிர்வாகம் மற்றும் பணியாளர்கள் மத்தியில் பணியிடத்தில் பாதுகாப்புப் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்தவும், தமிழக அரசின் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், மாநில பாதுகாப்பு விருதுகளை ஒவ்வோர் ஆண்டும் வழங்கி வருகிறது.
தமிழக அரசின் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் மாநில பாதுகாப்பு விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் அண்மையில் நடைபெற்றது.
இதில் சேலம் உருக்காலை பொது மேலாளர் டி. முத்துகுமார் (பணிகள்), துணை பொது மேலாளர் எஸ். மணிவண்ணன் (திட்டங்கள், பாதுகாப்புப் பொறியியல் மற்றும் தீயணைப்பு சேவைகள்) ஆகியோருக்கு வழங்கும் 2014, 2015, 2016 ஆம் ஆண்டுகளுக்கான மாநில பாதுகாப்பு விருதுகளை பெற்றனர். 
2016 ஆம் ஆண்டுக்கான உயர்ந்த உழைப்பாளர் முதல் இரண்டாம் பிரிவு விருதுகளை ஆலை பணியாளர்கள் பி. சோமசுந்தரம், ஜி. முருகேசன் ஆகியோர் பெற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT