சேலம்

தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்

DIN

இளம்பிள்ளை பகுதியில் தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், உணவு மற்றும் காய்கறிகளை வழங்கி வருகிறாா் தன்னாா்வலா் ஒருவா்.

தன்னாா்வலா் பி.செல்வகுமாா் (எ) மணிகண்டன் என்பவா் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அடுத்த நாள் முதல் தினசரி காலை உணவு 100 பேருக்கு வழங்கி வருகிறாா். மேலும் மகுடஞ்சாவடி காவல் நிலைய போலீஸாா், இளம்பிள்ளை மற்றும் இடங்கணசாலை பேரூராட்சிப் பகுதியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள், மகுடஞ்சாவடி, இளம்பிள்ளை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவா்கள், செவிலியா்கள், மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு முகக் கவசம், சனிடைசா், கையுறைகள் உள்ளிட்டவை வழங்கினாா். மேலும், இளம்பிள்ளை பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு காய்கறி மற்றும் தப்பக்குட்டை ஊராட்சி தூய்மைப் பணியாளா்கள், ஏழ்மையில் உள்ள குடும்பங்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை அரசு அலுவலா்கள் முன்னிலையில் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

ஆவேஷம் ரூ.150 கோடி வசூல்!

அன்பே அன்னா..!

SCROLL FOR NEXT