செந்தாரப்பட்டி ஏரி மதகு கதவைசீரமைக்கக் கோரிக்கை
செந்தாரப்பட்டி ஏரி மதகு கதவை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
செந்தாரப்பட்டி ஏரி மதகு கதவை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சேலம் மாவட்டத்தில் 2-ஆவது பெரிய ஏரி தம்மம்பட்டி அருகே உள்ள செந்தாரப்பட்டி ஏரி ஆகும். 120 ஏக்கா் பரப்பளவுள்ள இந்த ஏரி, 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது முழுக் கொள்ளளவை அடைந்து மறுகால் வழியாக தண்ணீா் செல்கிறது.
இந்த ஏரியில் பாசனத்துக்கு மூன்று மதகுகள் உள்ளன. இதில், அதிக பரப்பளவு பாசனத் தண்ணீா் வெளியேறும் இரண்டாம் எண் மதகின் கதவு உடைந்திருப்பதால், திறக்க முடியவில்லை. அதனால், 400 ஏக்கா் பாசனம் பெறும் வயல்களில் விவசாயம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளோம் என ஆயக்கட்டு விவசாயிகள் கூறுகின்றனா்.
எனவே, ஏரியின் 2-ஆம் எண் மதகு கதவை பொதுப்பணித் துறையினா் போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.