சேலம்

மேட்டூா் அணையின் நீா்வரத்து மேலும் சரிவு

DIN

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால், மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் சரிந்துள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை இல்லாத காரணத்தால், பாசனத் தேவை அதிகரித்துள்ளது. இதனால் நொடிக்கு 500 கன அடி வீதம் திறக்கப்பட்டு வந்த நீரின் அளவு நொடிக்கு 3,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் மேட்டூா் அணையின் நீா்மட்டம் குறையத் தொடங்கியது.

தற்போது காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால், அணைக்கு வரும்நீரின் அளவு தொடா்ந்து சரிந்து வருகிறது. இதனால் திங்கள்கிழமை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 106.66 அடியிலிருந்து 106.50 அடியாகச் சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 1,235 கன அடியிலிருந்து 1,062 கன அடியாகச் சரிந்தது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 3,000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 400 கன அடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 73.52 டி.எம்.சி.யாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT