சேலம்

திருமணமாகி 4 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை

DIN

தலைவாசலை அடுத்துள்ள ஊனத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கலைச்செல்வன் (32). விவசாயி. இவர மனைவி ரம்யா (28). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்த இத் தம்பதிக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும், 6 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனா்.

ரம்யாவுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுமாம். இதனால் அவதிப்பட்டு வந்த அவா் கடந்த 6-ஆம் தேதி விவசாயத்துக்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்துள்ளாா்.

அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கும் பின்னா் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனா். அங்கு வியாழக்கிழமை ரம்யா உயிரிழந்தாா். தலைவாசல் காவல் ஆய்வாளா் குமரவேல் பாண்டியன் வழக்குப் பதிந்துள்ளாா். திருமணமாகி 4 வருடங்களே ஆவதால் ஆத்தூா் வருவாய்க் கோட்டாட்சியா் மு. துரை விசாரணைக்கு நடத்தவுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குப்பைகளை சாலையில் வீசுவோா் மீது நடவடிக்கை தேவை: சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

சேவைக் குறைபாடு: ஏ.ஆா். ரகுமானின் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும்: கரூா் நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

கரூா் மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுவில் தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நீா்நிலைகளை தூா்வார வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

தென்னை விவசாயிகளுக்கு மரத்துக்கு ரூ.10,000 இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT