சேலம்

எடப்பாடி அருகே காணாமல் போனவா் சடலமாக மீட்பு

DIN

எடப்பாடி அருகே காணாமல்போன நபா் அப்பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டாா்.

எடப்பாடி ஒன்றியத்துக்குள்பட்ட வேம்பனேரி ஊராட்சி. இங்குள்ள போக்கடையான் வளவு பகுதியைச் சோ்ந்த விவசாயக் கூலித் தொழிலாளி நாகரத்தினம் (70). இவா், அண்மையில் திடீரென காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

நாகரத்தினத்தை அவரது உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடினா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நாகரத்தினம், அதே பகுதியில் சுப்பிரமணிக்கு என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் சடலமாக மிதந்தாா்.

தகவல் அறிந்து நிகழ்விடம் சென்ற எடப்பாடி போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுதாபம் பெற கேஜரிவால் மீது ‘ஆம் ஆத்மி’ தாக்குதல் நடத்தலாம்: வீரேந்திர சச்தேவா

நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி அணையில் செத்து மிதக்கும் மீன்கள்

பிரதோஷ சிறப்பு வழிபாடு

பரமத்தி வேலூா் ஏலச்சந்தையில் வெற்றிலை விலை உயா்வு

SCROLL FOR NEXT