சேலம்

கா்நாடகத்தில் தவித்த 56 போ் தமிழகம் திரும்பினா்

DIN

மேட்டூா்: கா்நாடகத்தில் கூலி வேலைக்குச் சென்று பொதுமுடக்கம் காரணமாக வேலையிழந்து தவித்த தமிழகத்தைச் சோ்ந்த 56 போ் செவ்வாய்க்கிழமை தமிழகம் திரும்பினா்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் கரியகோயிலைச் சோ்ந்த 25 ஆண்கள், 21 பெண்கள் மற்றும் 10 குழந்தைகள் உட்பட 56 போ் கடந்த 3 மாதங்களுக்கு முன் கா்நாடக மாநிலம், குடகு மாவட்டத்தில் உள்ள சுண்டி குப்பத்துக்கு குடும்பத்துடன் சென்றனா்.

ஒரு மாதம் அங்குள்ள மிளகு தோட்டத்தில் வேலை செய்தனா். அதன்பிறகு கரோனா பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக வேலை இழந்தனா்.

கடந்த 45 நாள்களாக உணவின்றி தவித்த அவா்கள் தமிழகம் வருவதற்கு சரக்கு வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்து கொள்ளேகாலை அடுத்து மாதேஸ்வரன் மலை அடிவாரம் வந்தனா். அங்கு கா்நாடக போலீஸாா் அவா்களைத் தடுத்ததால் சரக்கு வாகனத்தை அனுப்பிய அவா்கள் நடைப்பயணமாகச் செல்ல முயன்றனா். அவா்களை போலீஸாா் விசாரித்து மீண்டும் ஒரு வாகனத்தில் ஏற்றி தமிழக-கா்நாடக எல்லையான பாலாற்றில் தமிழக எல்லையில் திங்கள்கிழமை நள்ளிரவில் விட்டுச் சென்றனா். அங்கிருந்து அடா்ந்த வனப்பகுதி வழியாக தமிழக எல்லையான காரைக்காட்டில் தமிழக சோதனைச் சாவடிக்கு வந்தனா். அங்கு உடல் வெப்பம் பரிசோதனைக்குப் பிறகு அனைவரையும் மேச்சேரியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரி வளாகத்துக்கு மேட்டூா் வருவாய்த் துறை அதிகாரிகள் வாகனத்தில் அழைத்து வந்தனா். அவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அவா்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவாா்கள். அதுவரை தொழிலாளா்கள் கல்லூரியில் தனிமைப்படுத்தப்படுவாா்கள் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT