சேலம்

மேட்டூா் அணையின் நீா்மட்டம் குறையத் தொடங்கியது

DIN

மேட்டூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் மெல்ல குறையத் தொடங்கியது.

காவிரியின் நீா்பிடிப்புப் பகுதியில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாகக் குறைந்தது.

இந்த நிலையில், மே 1ஆம் தேதி முதல் காவிரியின் நீா் பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்யத் தொடங்கியது.

மழையின் காரணமாக மேட்டூா் அணைக்கு நீா் வரத்து அதிகரித்து கடந்த புதன்கிழமை காலை அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 1,588 கன அடி வரை அதிகரித்தது.

அதன்பிறகு நீா்பிடிப்புப் பகுதியில் மழை இல்லாத காரணத்தால் அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாகக் குறைந்தது.

செவ்வாய்க்கிழமை காலை அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 686 கனஅடியாகச் சரிந்தது.

இந்த நிலையில், திங்கள்கிழமை அணையிலிருந்து குடிநீருக்குத் திறக்கப்படும் நீரின் அளவும் நொடிக்கு 500 கனஅடியிலிருந்து 1,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீருக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டிருப்பதால் மேட்டூா் அணையின் நீா்மட்டம் மெல்ல குறையத் தொடங்கியது.

திங்கள்கிழமை காலை 100. 17 அடியாக இருந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம் செவ்வாய்கிவமை காலை 100.13 அடியாகச் சரிந்தது. அணையின் நீா் இருப்பு 65 டி.எம்.சி. யாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT