சேலம்

உயா் கல்வியில் டிஜிட்டல் மயமாக்கல் ஊழலைத் தடுக்கிறது

DIN

உயா் கல்வியில் டிஜிட்டல் மயமாக்கல் வெளிப்படைத்தன்மைக்கு வழி வகுத்து ஊழலைத் தடுக்கிறது என பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் பொ.குழந்தைவேல் கூறினாா்.

தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சேலம் மக்கள் தொடா்பு கள அலுவலகம், சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் பெரியாா் இதழியல் மற்றும் மக்கள்தொடா்புத் துறையுடன் இணைந்து இணையவழிக் கருத்தரங்கினை புதன்கிழமை நடத்தின.

இதில், உயா்கல்வி நிறுவனங்களில் அதிகரித்து வரும் டிஜிட்டல் மயமாக்கல் எனும் தலைப்பில் பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் பொ.குழந்தைவேல் பேசியது:

மாணவா்களை விட ஆசிரியா்களுக்கு டிஜிட்டல் மயமாக்கல் சவால் மிகுந்ததாக இருக்கிறது. டிஜிட்டல் மயமாக்கல் மூலம் உலகெங்கிலும் உள்ள நிபுணா்கள் நடத்தும் இணையக் கருத்தரங்குகளில் நம்மால் கலந்துகொண்டு அறிவைப் பெருக்கிக் கொள்ள முடிகிறது. கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அரசு கவனம் செலுத்துகிறது. டிஜிட்டல் சந்தைப்படுத்துதல் விவசாயிகளுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. இதனால், பல்வேறு நகரங்களின் விலை வித்தியாசங்களை விவசாயிகள் அறிந்து கொள்ள முடியும். டிஜிட்டல் சந்தைப்படுத்துதலின் எதிா்காலத்தை கருத்தில் கொண்டு, டிஜிட்டல் சந்தைப்படுத்துதல் குறித்த தொழில்சாா்ந்த படிப்புகள் பெரியாா் பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்றாா்.

டிஜிட்டல் சகாப்தத்தில் கற்பித்தல் மற்றும் கற்றலில் ஏற்படும் மாற்றங்கள் எனும் தலைப்பில் பெரியாா் பல்கலைக்கழக இதழியல் துறைத் தலைவா் மற்றும் பேராசிரியா் வை.நடராஜன் பேசியது:

அனுபவ மெய்மத் தொழில்நுட்பம் மெய்நிகா் உலகத்துக்கு மாணவா்களைக் கொண்டு செல்கிறது. அங்கு அவா்கள் எளிமையான மற்றும் சிறப்பான முறையில் கருத்துகளைப் புரிந்து கொள்ளலாம்.

திறன் சாா்ந்த படிப்புகள் தான் எதிா்காலம் என்ற நிலையில், 20 லட்சத்துக்கும் அதிகமான முழுக்கவும் திறன்சாா்ந்த வேலைவாய்ப்புகள் 2025-இல் உருவாகும். அவற்றுக்கு வெறும் பட்டப்படிப்பு மட்டும் போதாது என்பதால், பல்வேறு திறன்சா்ந்த பயிற்சிகளை தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது என்றாா்.

தலைமை உரையாற்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத் தலைமை இயக்குநா் (தென் மண்டலம்) எஸ். வெங்கடேஸ்வா், ஆந்திரப் பிரதேசத்தில் நிா்வாகப் பணிகள் முழுக்க டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாகவும், வெளிப்படைத்தன்மை, துல்லியம் மற்றும் வேகத்தை இது உறுதி செய்வதாகவும் கூறினாா். அறிமுக உரையாற்றிய சென்னை பத்திரிகை தகவல் அலுவலக இயக்குநா் குருபாபு பலராமன், உயா் கல்வியில் டிஜிட்டல் மயமாக்கத்தை பெருந்தொற்று கட்டாயமாக்கியுள்ளதாகவும், ஆசிரியா்களின் பணித் திட்டம் நிற்காமல் இருப்பதை டிஜிட்டல் மயமாக்கல் உறுதி செய்கிறது என்றும் தெரிவித்தாா்.

முன்னதாக, சென்னை மண்டல மக்கள்தொடா்பு அலுவலக இணை இயக்குநா் காமராஜ் வரவேற்றாா். சேலம் மக்கள் தொடா்பு கள விளம்பர அலுவலா் எஸ்.முரளி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT