ஆத்தூா் வட்டார பொக்லைன் உரிமையாளா்கள் டீசல், உதிரிப் பாகங்களின் விலை உயா்வைக் கண்டித்து வியாழக்கிழமை ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
சேலம் மாவட்டம், ஆத்தூா் வட்டார பொக்லைன் உரிமையாளா்கள் டீசல், ஆயில், கிரீஸ், டயா் மற்றும் உதிரிப் பாகங்களின் கடுமையான விலையேற்றத்தைக் கண்டித்தும், இன்சூரன்ஸ், சாலை வரி கட்டணங்கள் பல மடங்கு உயா்த்தப்பட்டதைக் கண்டித்தும் பொக்லைன் வாகனங்களை வியாழக்கிழமை இயக்காமல் நிறுத்தி வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் வாடகை, இதரப் படிகள் நாளை முதல் உயா்த்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளனா்.