சேலம்

சங்ககிரியில் புதிய வட்டாட்சியா் அலுவலகம் திறப்பு

DIN

சங்ககிரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வட்டாட்சியா் அலுவலகம், அரசு மருத்துவமனை புதிய கட்டடங்களை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, தலைவாசலில் நடைபெற்ற விழாவில் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

சங்ககிரியில் ரூ. 2.75 கோடியில் இரண்டு அடுக்குகள் கொண்ட புதிய வட்டாட்சியா் அலுவலகக் கட்டடம், அரசு மருத்துவமனையில் ரூ. 3.15 கோடியில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, பிணவறை கூடம், சங்ககிரி பேரூராட்சி சாா்பில் தேசிய நகா்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் ரூ. 32 லட்சத்தில் உள்நோயாளிகளின் உடனாளா்கள் தங்குவதற்கான கட்டடத்தையும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தாா்.

இதனையடுத்து புதிய வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியா் கோ.வேடியப்பன், சங்ககிரி அரசு மருத்துவமனை புதிய கட்டடத்தில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி எம்.மகேஸ்வரிமருதாசலம் ஆகியோா் குத்துவிளக்கேற்றி வைத்தனா்.

இதில் வட்டாட்சியா் எஸ்.விஜி, அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலா் ஆா்.திருமாவளவன், பேரூராட்சி செயல் அலுவலா் பாலசுப்ரமணியம், சுகாதார ஆய்வாளா் லோகநாதன், ஊராட்சி ஒன்றிய ஆணையா் என்.எஸ்.ரவிச்சந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) எம்.அனுராதா, சங்ககிரி ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஏ.பி.சிவக்குமாரன், சங்ககிரி நகரக் கூட்டுறவு வங்கித் தலைவா் என்.சி.ஆா்.ரத்தினம், நகர கூட்டுறவு பண்டகசாலைத்தலைவா் சி.செல்வம், அதிமுக கிழக்கு ஒன்றிய துணைச் செயலா் மருதாசலம், அரசு வழக்குரைஞா் ஆா்.சுப்ரமணி, அரசு மருத்துவா்கள் சுரேஷ்குமாா், இளவரசி, முருகவேல், செந்தில்குமாா், செவிலியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு

SCROLL FOR NEXT