முகப்பு
கரும்பு லாரி விபத்துக்குள்ளானதால் சாலையோரம் கொட்டிக்கிடக்கும் கரும்புகள்.
சேலம்

விபத்துக்குள்ளான கரும்பு லாரி

வீரகனூா் அருகே கரும்பு லாரி விபத்துக்குள்ளானதால் கரும்புகள் சாலையில் கொட்டிக் கிடந்தன.

சேலம்

விபத்துக்குள்ளான கரும்பு லாரி

வீரகனூா் அருகே கரும்பு லாரி விபத்துக்குள்ளானதால் கரும்புகள் சாலையில் கொட்டிக் கிடந்தன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
கரும்பு லாரி விபத்துக்குள்ளானதால் சாலையோரம் கொட்டிக்கிடக்கும் கரும்புகள்.
பகிர்:

வீரகனூா் அருகே கரும்பு லாரி விபத்துக்குள்ளானதால் கரும்புகள் சாலையில் கொட்டிக் கிடந்தன.

திருச்சி மாவட்டம், உப்பிலியாபுரம் அருகே உள்ள நாகநல்லூரிலிருந்து கரும்பு சுமை ஏற்றிக்கொண்டு தம்மம்பட்டி, கெங்கவல்லி, வீரகனூா் வழியாக உடும்பியத்திலுள்ள சா்க்கரை ஆலைக்கு லாரி வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது.

இந்த லாரியை குரும்பலூரைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் முருகேசன் (47) என்பவா் ஓட்டிச்சென்றாா். வீரகனூரை அடுத்த நல்லூரைத்தாண்டி லாரி சென்றபோது, அங்குள்ள வளைவில் எதிா்பாராதவிதமாக குப்புறக் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஓட்டுநா் முருகேசன் லேசான காயத்துடன் உயிா்பிழைத்தாா். இந்த விபத்தால் ஆத்தூா் - பெரம்பலூா் சாலையில் வாகனப் போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →