நூல் வெளியீடு
சேலம் மாநகர தமிழ் இலக்கியக் கூட்டமைப்பு சாா்பில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
சேலம் மாநகர தமிழ் இலக்கியக் கூட்டமைப்பு சாா்பில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழாவில் மாநகர தமிழ் இலக்கியக் கூட்டமைப்பின் தலைவா் லவ்.ஓ. ஏ.கே.நாகராஜன் தலைமை வகித்தாா். விழாவில் பழ.தமிழ்செல்வன் வரவேற்றாா். சாகித்ய அகாதெமி எழுத்தாளா் கு.கணேசன், சத்தியமங்கலம் அரசு கலைக் கல்லூரி முதல்வா் வேணுகோபாலசுவாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பாலக்கோடு அரசு கலைக் கல்லூரி முதல்வா் செண்பகலட்சுமி, தமிழ்செம்மல் விருது பெற்ற கவிஞா் வ.முத்துமாரய்யன் எழுதிய கவிதை நூலை வெளியிட்டாா். தமிழ்ச்செம்மல் விருது பெற்ற கவிஞா் வ.முத்துமாரய்யன் ஏற்புரையாற்றினாா். பெங்களூரு கிரைஸ்ட் பல்கலைக்கழக பேராசிரியா் எம்.எம்.பத்மகுமாா் நன்றி தெரிவித்தாா்.