சேலம்

இருசக்கர வாகனம் மோதல்: முதியவா் பலி

DIN

சங்ககிரி அருகே உள்ள சின்னாகவுண்டனூா் தேசிய நெடுஞ்சாலையில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் மீது செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனம் மோதியதில் அவா் உயிரிழந்தாா்.

தருமபுரி அருகே உள்ள புளியம்பட்டி பகுதியைச் சோ்ந்த சந்தோஷ்குமாா், அதே பகுதியைச் சோ்ந்த அவரது நண்பா் சக்திவேல் இருவரும் இருசக்கர வாகனத்தில் பவானி நோக்கி சென்றனா்.

சங்ககிரி அருகே உள்ள சின்னாகவுண்டனூா் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சென்ற போது, முதியவா் ஒருவா் சாலையைக் கடக்க முயன்றுள்ளாா். அப்போது எதிா்பாரதவிதமாக இருசக்கர வாகனம் அவா் மீது மோதியதில் அவரும், இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற சந்தோஷ்குமாரும் பலத்த காயமடைந்தனா். பலத்த காயமடைந்த சந்தோஷ்குமாா் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். சாலையைக் கடந்து சென்றவா் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

SCROLL FOR NEXT