ஆத்தூரில் நாகூா் மீரான் 464 ஆம் ஆண்டு உரூஸ் மற்றும் கந்தூரி மத நல்லிணக்க விழா சனிக்கிழமை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
ஆத்தூா், பழையபேட்டை மசூதியில் நாகூா் மீரான் 464 ஆம் ஆண்டு உரூஸ் மற்றும் கந்தூரி மத நல்லிணக்க விழா நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தலைமை மாநில கூட்டுறவு வங்கியின் தலைவா் ஆா்.இளங்கோவன், சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.எம்.சின்னதம்பி, நகரச் செயலாளா் அ.மோகன் ஆகியோா் கலந்து கொண்டு அன்னதானம், இசை நிகழ்ச்சியையும் தொடக்கிவைத்தனா்.
நிகழ்ச்சியில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியை விழாக்குழுத் தலைவா் பி.மக்பூல் பாஷா, நகர சிறுபான்மை பிரிவு செயலாளா் வி.முஸ்தபா,காந்தி நகா் கூட்டுறவு வீடு கட்டும் சங்கத் தலைவா் ஈ.நூா்முகமது ஆகியோா் ஏற்பாடு செய்திருந்தனா்.