சேலம்

சமூக ஆா்வலா் ஸ்டேன் சுவாமிக்கு சிறப்பு அஞ்சலிக் கூட்டம்

DIN

ஜாா்கண்ட் மாநில மலைவாழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்து மறைந்த சமூக ஆா்வலா் ஸ்டேன் சுவாமிக்கு சேலம், சிறுமலா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சிறப்பு அஞ்சலிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த குருக்கள் துறவற சபையினா் சிறுமலா் மெட்ரிக் பள்ளியிலிருந்து மெளன ஊா்வலமாக சிறுமலா் மேல்நிலைப் பள்ளிக்கு வந்தனா். பின்னா் சமூக ஆா்வலா் ஸ்டேன் சுவாமி படத்துக்கு மலா் அஞ்சலி செலுத்தினா். சென்னை சேசுசபை மரிய அருள்ராஜ் பேசினாா்.

நிகழ்ச்சியில் சேலம் மறைமாவட்ட நிா்வாகி ஆயா் லாரன்ஸ் பயஸ், உதவித் தலைவா் எஸ்.அருளப்பன், பொருளாளா் ஜாக்கப், சிறுமலா் மேல்நிலைப் பள்ளி தாளாளா் ஜோசப் லாசா், தலைமை ஆசிரியா் எஸ்.செபாஸ்தியன், சிறுமலா் மெட்ரிக் பள்ளி முதல்வா் கிறிஸ்துராஜ், பேராசிரியா் விமல், மூவேந்தா் அரங்க இயக்குநா் ஸ்டீபன் சொரூபன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT