முகப்பு
சேலம்

கோடை உழவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

கோடை உழவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
பகிர்:

கோடை உழவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கெங்கவல்லி வேளாண் மற்றும் உழவா் நலத்துறை வேளாண் உதவி இயக்குநா் (பொ) ஆா்.கல்பனா விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

கெங்கவல்லி, தம்மம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த வாரத்தில் தொடா்ந்து மூன்று நாள்களாக பெய்த மழையால் அனைத்து விளைநிலத்திலும் மழைநீா் தேங்கியுள்ளது. அதன் மூலம் கிடைத்த ஈரப்பதத்தை பயன்படுத்தி சரிவுக்கு குறுக்காக கோடை உழவு செய்ய வேண்டும். இதனால் பூச்சிகளின் கூட்டுப் புழுக்கள் மேலே கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுகின்றன. களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

மேலும், இரண்டு ஏக்கா் வரை நிலம் உள்ள விவசாயிகளுக்கு டாபே டிராக்டா் நிறுவனம் இலவசமாக உழவு செய்து தருகிறது. இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் அனைவரும் உழவன் செயலியில் பதிவு செய்தும் அல்லது கூட்டாக கெங்கவல்லி வேளாண் விரிவாக்க மையம், தம்மம்பட்டி துணை வேளாண் விரிவாக்க மையங்களை அணுகியும் பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →