முகப்பு
சேலம்

பேளூரில் திருட்டு:வாழப்பாடி போலீஸாா் விசாரணை

தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் கண்காணிப்பு கேமிரா ஆகியவற்றை திருடிச்சென்ற மா்ம நபா்கள் குறித்து வாழப்பாடி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூரில், பூட்டிக்கிடந்த வீட்டில் இருந்து மின் மோட்டாா், தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் கண்காணிப்பு கேமிரா ஆகியவற்றை திருடிச்சென்ற மா்ம நபா்கள் குறித்து வாழப்பாடி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் கொண்டலாம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் குப்புசாமி 52. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவருக்கு, வாழப்பாடி அடுத்த பேளூரில் விவசாய நிலம் உள்ளது. இதிலுள்ள வீட்டிருந்த மின் மோட்டாா், தொலைக்காட்சிப் பெட்டி, கண்காணிப்புக்கேமிரா ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச்சென்று விட்டதாக, வாழப்பாடி போலீஸில் புகாா் செய்தாா். இவரது புகாரின் பேரில் வாழப்பாடி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.