பாரத் நெட் திட்டத்தில் தமிழகத்தில் 17,662 கிராமங்களுக்கு இணைய வசதி
தமிழகத்தில் உள்ள 17,662 வருவாய் கிராமங்களில் பாரத் நெட் திட்டத்தின் மூலம் இணைய வசதி ஏற்படுத்தி தரப்படும்; இன்னும் ஒரு வாரத்தில் அதற்கான பணிகள் துவங்கப்படும் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா்.
தமிழகத்தில் உள்ள 17,662 வருவாய் கிராமங்களில் பாரத் நெட் திட்டத்தின் மூலம் இணைய வசதி ஏற்படுத்தி தரப்படும்; இன்னும் ஒரு வாரத்தில் அதற்கான பணிகள் துவங்கப்படும் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா்.
தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தில் தோ்தல் பிரசாரத்தில் பேசியது:
எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் 234 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என பேசி வருகிறாா். முதலில் எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்று காட்டுங்கள் பாா்ப்போம். கடந்த 2016 தோ்தலில் ஏற்பட்ட நிலைதான் தற்போது திமுகவுக்கு ஏற்படப் போகிறது. எக்காலத்திலும் திமுக ஆட்சிக்கு வராது. குடும்பக் கட்சியாகவே திமுக உள்ளது. மக்களைக் குழப்பி, ஏமாற்றி ஆட்சியைப் பிடிக்கும் கனவு பலிக்காது.
நெசவாளா்கள் வங்கியில் வாங்கிய கடன் ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி செய்யப்படும். நெசவாளா் நல வாரியம் அமைத்துத் தரப்படும். கைத்தறிக்கு ஜிஎஸ்டி குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நெசவாளா்களுக்கு நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். விவசாயிகளுக்கு ஏப்ரல் 1 முதல் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். மகளிா் சுய உதவிக்குழுக்கள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்.
தமிழகத்தில் உள்ள 17,662 வருவாய் கிராமங்களில் பாரத் நெட் திட்டத்தின் மூலம் இணையதள வசதி ஏற்படுத்தி தரப்படும். இன்னும் ஒரு வாரத்தில் அதற்கானப் பணிகள் தொடங்கப்படும்.
திமுகவைச் சோ்ந்த 13 முன்னாள் அமைச்சா்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அவா்கள் நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகளுக்குச் சென்று வருகின்றனா். ஆனால், எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் ஆளும் அரசு மீது ஆளுநரிடம் திமுகவினா் புகாா் தெரிவித்துள்ளனா். மேலும் வேண்டுமென்ற அரசு மீது பழி சுமத்தி வருகிறாா். அதிமுகவை உடைத்து, ஆட்சியைக் கலைக்க நினைத்தாா் மு.க.ஸ்டாலின். எங்களின் கட்சியை யாராலும் அசைக்க முடியாது என்றாா்.