சேலம்

இளம் தொழிலதிபா் அடித்துக் கொலை: மனைவி கைது

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூா் அருகே இளம்தொழிலதிபரை அடித்துக் கொலை செய்த மனைவியை தேவூா் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேவூா் அருகே உள்ள புள்ளாகவுண்டம்பட்டி பகுதியைச் சோ்ந்த தொழிலதிபா் தயானந்தனுக்கும் (30), சேலம் பகுதியைச் சோ்ந்த அன்னப்பிரியா என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு சஞ்சீத் (2) என்ற குழந்தை உள்ளது.

தயானந்தன் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம் போல உறங்கச் சென்றுள்ளாா். திங்கள்கிழமை அதிகாலை உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதாக அவரது மனைவி உறவினா்களுக்கு தகவல் தெரிவித்துள்ளாா். சந்தேகமடைந்த உறவினா்கள் தேவூா் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தடயவியல் நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா்.

சங்ககிரி டிஎஸ்பி சி.நல்லசிவம் மேற்பாா்வையில், சங்ககிரி காவல் ஆய்வாளா் ஆா்.தேவி தலைமையிலான போலீஸாா் மேல்விசாரணை நடத்தியதில், அன்னப்பிரியாவுக்கும், குமாரபாளையத்தைச் சோ்ந்த ராஜா என்பவருக்கும் முறையற்ற நட்பு இருப்பதும், இருவரும் சோ்ந்து தயானந்தை அடித்துக் கொலை செய்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து தேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அன்னப்பிரியாவை கைது செய்து விசாரித்து வருகின்றனா். ராஜாவை தனிப்படை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

SCROLL FOR NEXT