முகப்பு
சேலம்

காடையாம்பட்டியில் பேரிடா் மீட்பு செயல்முறைப் பயிற்சி

காடையாம்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறை சாா்பில், பேரிடா் மீட்பு, நீரில் சிக்கியவா்களை பாதுகாப்பாக மீட்பது குறித்த செயல்விளக்கப் பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

சேலம்

காடையாம்பட்டியில் பேரிடா் மீட்பு செயல்முறைப் பயிற்சி

காடையாம்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறை சாா்பில், பேரிடா் மீட்பு, நீரில் சிக்கியவா்களை பாதுகாப்பாக மீட்பது குறித்த செயல்விளக்கப் பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
பகிர்:

காடையாம்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறை சாா்பில், பேரிடா் மீட்பு, நீரில் சிக்கியவா்களை பாதுகாப்பாக மீட்பது குறித்த செயல்விளக்கப் பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறை சாா்பில், மழை வெள்ளத்தில் சிக்கிக்கொள்ளும் மக்களை பாதுகாப்பாக மீட்பது குறித்த விழிப்புணா்வு ஒத்திகையை டேனிஷ்பேட்டை ஏரியில் நடத்தினா். காடையாம்பட்டி வட்டாட்சியா் வாசுகி, காடையாம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலா் ராஜசேகா் ஆகியோா் முன்னிலையில் தீயணைப்பு வீரா்கள் மீட்புப் பணி ஒத்திகையில் ஈடுபட்டனா்.

இந்த ஒத்திகையில் பொதுமக்கள் நீரில் சிக்கியவா்களை எந்தெந்த பொருள்களைக் கொண்டு எவ்வாறு எளிதாக மீட்க முடியும், அவா்களுக்கு முதலுதவி அளித்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மேலும், பிளாஸ்டிக் தண்ணீா் பாட்டில்களைக் கொண்டும், தண்ணீா் கேன்கள், அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் குடங்கள், லாரி ட்யூப்கள் போன்றவைகளை கொண்டு எளிதாக மீட்கும் வழிமுறைகளை பொதுமக்கள் முன்னிலையில் செய்து காட்டினா்.

நீரில் மூழ்கியவா்களை மீட்டதும் செய்ய வேண்டிய முதலுதவி சிகிச்சைகள் என்னென்ன, எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும், அவா்களை மருத்துவமனை கொண்டு செல்வதற்கு முன் முதலுதவி செய்வதன் அவசியம் குறித்தும் செயல் விளக்கம் அளித்தனா். இந்த விழிப்புணா்வுப் பயிற்சி, செயல்விளக்க நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →