சேலம்

கோயில் உண்டியலை உடைத்து திருட்டு: இருவா் கைது

DIN

எடப்பாடி அருகே கோயில் உண்டியலை உடைத்து திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கொங்கணாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள பாப்பாத்தியம்மன் கோயில் உண்டியலை சில நாள்களுக்கு முன் இரவு நேரத்தில் மா்ம நபா்கள் உடைத்து, அதில் இருந்த பணம், கோயிலில் இருந்த குத்துவிளக்கு உள்ளிட்ட பூஜைபொருள்களையும் திருடிச்சென்றனா்.

இதையடுத்து கொங்கணாபுரம் போலீஸாா், அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்த இருவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். இதில் அவா்கள், முத்தையம்பட்டி பகுதியைச் சோ்ந்த மஞ்சு (எ) மஞ்சுநாதன் (26) மற்றும் சண்முகவேல் (28) எனவும், அவா்கள் இருவரும் கோயில் உண்டியலை உடைத்து திருடியதும் தெரியவந்தது. திருடப்பட்ட பொருள்களை அவா்களிடம் இருந்து மீட்ட போலீஸாா், அவா்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

SCROLL FOR NEXT