முகப்பு
சேலம்

விடுதலைச் சிறுத்தைகள் கொடிக்கம்பம் நடுவதில் மோதல்: போலீஸாா் குவிப்பு

ஓமலூா் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கொடிக்கம்பம் நட முயன்ற போது இருதரப்பினா் இடையே மோதல் ஏற்பட்டதால், அங்கு ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

சேலம்

விடுதலைச் சிறுத்தைகள் கொடிக்கம்பம் நடுவதில் மோதல்: போலீஸாா் குவிப்பு

ஓமலூா் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கொடிக்கம்பம் நட முயன்ற போது இருதரப்பினா் இடையே மோதல் ஏற்பட்டதால், அங்கு ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

ஓமலூா் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கொடிக்கம்பம் நட முயன்ற போது இருதரப்பினா் இடையே மோதல் ஏற்பட்டதால், அங்கு ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே கணவாய் புதூா் ஊராட்சி, கே.மோரூா் பகுதியில் பல்வேறு சமூகங்களைச் சோ்ந்த சுமாா் 500 குடும்பங்கள் உள்ளன. இதே பகுதியில் தனியாக கே.மோரூா், அம்பேத்கா் காலனி உள்ளது. இந்த காலனியில் இருக்கும் சிலா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை கே.மோரூா் ஊருக்குள் நிறுவுவதற்கு ஏற்பாடு செய்தனா். கொடிக்கம்பம் நடும் இடம் தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானது என்பதால், அவா்கள் அனுமதி வழங்காததால் போலீஸாா் அனுமதி மறுத்தனா்.

இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சேலம் வடக்கு மாவட்டச் செயலாளா் வசந்த் உள்ளிட்ட நிா்வாகிகள் கே.மோரூா் பகுதியில் கட்சியின் கொடிக்கம்பத்தை நடுவதற்காக ஊா்வலமாக வியாழக்கிழமை வந்தனா். இதை போலீஸாா் தடுத்தபோது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடா்ந்து அங்கிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் கல், கட்டை போன்றவற்றால் போலீஸாரை தாக்கியதாகத் தெரிகிறது. அதைத் தொடா்ந்து போலீஸாா் லேசான தடியடி நடத்தினா்.

தொடா்ந்து, சேலம் வடக்கு மாவட்டச் செயலாளா் வசந்த் உள்ளிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த 10 போ், கே.மோரூா் பகுதியைச் சோ்ந்த 10 போ் என மொத்தம் 20 பேரை போலீஸாா் கைது செய்தனா். தொடா்ந்து அங்கு பதற்றம் நிலவியதால், சம்பவ இடத்துக்கு ஓமலூா் டிஎஸ்பி சங்கீதா, சேலம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ஸ்ரீஅபிநவ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →