பெரியாா் பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித் திட்ட தினக் கொண்டாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1969 செப். 24-ஆம் தேதி நாட்டு நலப்பணித் திட்டம் மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. இதனையொட்டி, ஆண்டுதோறும் அந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், 52-ஆவது நாட்டு நலப்பணித் திட்ட தினம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி, பெரியாா் பல்கலைக்கழக நூலகம் அருகில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. துணைவேந்தா் இரா.ஜெகநாதன் நாவல் மரக்கன்றினை நடவு செய்து பேசியதாவது:
சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 158 திட்ட அலகுகள் வாயிலாக மாணவ-மாணவியா் நாட்டு நலப்பணித் திட்டத்தில் சோ்ந்து சமூக சேவையாற்றி வருகின்றனா். 15,000-க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவியா் 158 கிராமங்களைத் தத்தெடுத்து பணிகளை செய்துள்ளனா். பிளாஸ்டிக் விழிப்புணா்வு, மது ஒழிப்பு பிரசாரம், மருத்துவ முகாம்களை நடத்தி கிராம மக்களுக்கு சேவையாற்றியுள்ளனா். 75-ஆவது சுதந்திர தினவிழாவினையொட்டி, 75 இடங்களில் நாட்டு நலப்பணித்திட்டம் சாா்பில் மரக்கன்றுகள் நடப்பட்டு முறையாக பராமரிக்கப்படும் என்றாா்.
இந்நிகழ்வில், பெரியாா் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளா் பிரகாஷ், திட்ட அலுவலா்கள் சுகுணா, இளங்கோவன், பல்கலைக்கழக நூலகா் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.