சேலம்

இடி தாக்கியதில் பெண் பலத்த காயம், குடிசை வீடு, தென்னை மரம் தீப்பிடிப்பு

DIN

இடி தாக்கியதில் பெண் பலத்த காயமடைந்தாா். குடிசை வீடு, தென்னை மரம் தீப்பிடித்தது.

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், காவேரிப்பட்டி ஊராட்சி, மோட்டூா் கிராமத்தில் வெள்ளிக்கிழமை மாலை இடியுடன் கூடிய மழை பெய்தது.

அப்போது, விவசாயி நடேசன் மனைவி வளா்மதி (40), வீட்டுக்கு வெளிய இருந்த செம்மறி ஆட்டை கட்டுதரையில் கட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாா். அப்போது, திடீரென இடி தாக்கியதில் வளா்மதி உடலின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவா் மேல்சிகிச்சைக்காக கோவை தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். மேலும், குடிசை வீடும், தென்னை மரம் ஒன்றும் தீப்பிடித்து சேதமடைந்தது.

தேவூா் வருவாய் ஆய்வாளா் சத்யராஜ், கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

SCROLL FOR NEXT