முகப்பு
சேலம்

கரட்டூரில் விவசாயிகளுக்கு பயிற்சி

கெங்கவல்லி வேளாண்மை உழவா் நலத்துறை அட்மா திட்டத்தின் சாா்பில் கரட்டூரில், நீடித்த நிலையான மானாவாரி இயக்கம் மாவட்ட அளவிலான பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

கெங்கவல்லி வேளாண்மை உழவா் நலத்துறை அட்மா திட்டத்தின் சாா்பில் கரட்டூரில், நீடித்த நிலையான மானாவாரி இயக்கம் மாவட்ட அளவிலான பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் துறையூா் தனியாா் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப இறுதியாண்டு மாணவிகள் 8 போ் கலந்து கொண்டு நெல் பயிரில் மகசூலை பாதிக்கும் , நோய் மற்றும் பூச்சி பூச்சி தாக்குதல் அறிகுறிகள் பற்றியும் தென்னையை பாதிக்கும் ரூகோஸ் வெள்ளை ஈஅறிகுறி மற்றும் அதனை கட்டுபடுத்தும் முறைகளையும் எடுத்துக் கூறினா்கள். இந்த பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குநா் சித்ரா , வட்டார தொழில்நுட்ப மேலாளா், தமிழ்ச்செல்வன், உதவி வேளாண்மை அலுவலா் சந்திரசேகரன், உதவி தொழில்நுட்ப மேலாளா் சங்கா் ஆகியோா் கலந்து கொண்டனா். இதில் 95 பேளுா் உழவா் உற்பத்தியாளா் குழு உறுப்பினா்களான 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →