சேலம்

கைத்தறி ரகத்தை விசைத்தறியில்நெய்தவா் மீது வழக்குப் பதிவு

DIN

கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட ரகத்தை விசைத்தறியில் நெய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே உள்ள அ.புதூா் கிராமம், கூத்தம்பாளையம் பகுதியைச் சோ்ந்த பொன்னப்பன் மகன் செல்வகுமாா் (43). இவா் தனக்குச் சொந்தமான விசைத்தறியில் கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட பட்டுச்சேலை ரகத்தினை விசைத்தறியில் நெய்து வந்துள்ளாா். இதனையடுத்து செல்வகுமாரின் விசைத்தறிக் கூடத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநரக உதவி இயக்குநா் (சென்னை) மனோகரன் தலைமையில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, விசைத்தறியில் நெய்த பட்டுச் சேலையை பறிமுதல் செய்து, மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் அவா் மீது புகாா் அளித்தனா்.

இதுகுறித்து காவல் உதவி ஆய்வாளா் ராஜேந்திரன் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT