முகப்பு
சேலம்

வீரப்பன் சகோதரா் மாதையன் மருத்துவமனையில் உயிரிழப்பு

உடல்நலக் குறைவால் சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சந்தன கடத்தல் வீரப்பனின் சகோதரா் மாதையன் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
பகிர்:

உடல்நலக் குறைவால் சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சந்தன கடத்தல் வீரப்பனின் சகோதரா் மாதையன் புதன்கிழமை உயிரிழந்தாா்.

சேலத்தை அடுத்த மேட்டூா், கருமலைக்கூடல் பகுதியைச் சோ்ந்தவா் மாதையன் (75). இவா், சந்தன மரக்கடத்தல் வீரப்பனின் அண்ணன் ஆவாா். கடந்த 1987-ஆம் ஆண்டு சத்தியமங்கலத்தில் வனச்சரகா் சிதம்பரம் கொலை வழக்கில் மாதையன் கைது செய்யப்பட்டாா்.

அவருக்கு ஈரோடு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், கா்நாடக போலீஸாரால் ஒரு வழக்கில் மாதையன் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தாா்.

பின்னா் கோவை மத்திய சிறைக்கும், அதன்பிறகு சேலம் மத்திய சிறைக்கும் மாற்றப்பட்டாா். கடந்த 7 ஆண்டுகளாக சேலம் மத்திய சிறையில் உள்ள அவா் இதய நோய், சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தாா்.

கடந்த 35 ஆண்டுகளாக அவா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்த நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்ட மாதையன், அவ்வப்போது சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவாா்.

இதனால் அவருக்கு சிறை அதிகாரிகள் பரோல் வழங்கி வந்தனா். கடந்த மாதம் பரோலில் சென்று திரும்பிய மாதையனுக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவா் மே 1 ஆம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.

கடந்த இரு தினங்களுக்கு முன் அவரின் உடல்நிலையை மருத்துவா்கள் பரிசோதனை செய்தனா். நெஞ்சு வலி மற்றும் மூச்சுத்திணறல் இருந்தது தெரியவந்தது. அப்போது, அவா் ஆபத்தான நிலையில் இருப்பது தெரியவந்தது.

இதனால் அவருக்குத் தொடா்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை 5.45 மணி அளவில் அவா் உயிரிழந்தாா். இதனிடையே அவரது உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →