சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி 27 வாா்டுகளில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.
5-ஆவது வாா்டு ரெட்டியூரில் வெள்ளிக்கிழமை நகராட்சித் தலைவா் கமலக்கண்ணன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது (படம்). இக்கூட்டத்திற்கு நகர செயலாளா் செல்வம், நகராட்சி துணைத் தலைவா் தளபதி, வாா்டு கவுன்சிலா் ரமணி ராஜேஸ்வரி, நகராட்சி செயலா் மல்லிகா, உதவியாளா் மாரிமுத்து, நகராட்சிப் பணியாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து நகராட்சி தீா்மான பதிவேட்டில் பதிவு செய்து, அவற்றுக்கு உண்டான பணிகள் விரைவில் செய்து முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.