எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் கூட்டுறவு வேளாண்மை விற்பனை சங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ. 11.42 லட்சம் மதிப்பிலான நிலக்கடலை விற்பனை நடைபெற்றது.
விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்த சுமாா் 845 மூட்டை நிலக்கடலை 141 லாட்டுகளாகப் பிரிக்கப்பட்டு பொது ஏலம் விடப்பட்டது. இதில் பட்டாணி ரக நிலக்கடலை ஈரப்பதமான நிலையில் 65 கிலோ எடையுள்ள மூட்டை ரூ. 1,400 முதல் ரூ. 2,250 வரையில் விற்பனையானது. அதேபோல உலா்ந்த நிலையில் உள்ள நிலக்கடலை மூட்டை ரூ. 2,300 முதல் ரூ. 3,150 வரை விற்பனையானது. நாள் முழுவதும் நடைபெற்ற போது ஏலம் மூலம் ரூ. 11. 42 லட்சத்துக்கு நிலக்கடலை வா்த்தகம் நடைபெற்றது.