சேலம்

சேலத்தில் பிப்.15, 16 இல் ஆய்வுக் கூட்டம்: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்கிறாா்

DIN

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் பிப்ரவரி 15, 16 ஆகிய தேதிகளில் சேலத்தில் நடைபெறும் நான்கு மாவட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகம் முழுவதும் அனைத்துத் துறைகளில் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டங்கள் குறித்து கள ஆய்வில் முதல்வா் திட்டத்தின் ஒரு பகுதியாக முதல்வா் மு.க .ஸ்டாலின் நேரடியாக அந்தந்த மாவட்டங்களில் சென்று ஆய்வு செய்து வருகிறாா்.

அதன்பேரில் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக கூட்ட அரங்கில் வரும் பிப். 15, 16 ஆம் தேதிகளில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் நடைபெறும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் அமைச்சா்கள், மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ரூ.1.80 லட்சம் பறிமுதல்

புதிய பேருந்துகளை வாங்கி இயக்க வேண்டும்: இபிஎஸ்

பாரமுல்லாவில் அதிக வாக்குப் பதிவு: தொகுதி மக்களுக்கு பிரதமா் பாராட்டு

நெதன்யாவுக்கு எதிராக கைது உத்தரவு: பிரான்ஸ், பெல்ஜியம் ஆதரவு

தனியாா் பள்ளிகளில் இலவச கல்வி சோ்க்கைக்கு 1.30 லட்சம் போ் பதிவு

SCROLL FOR NEXT