சேலம்

அதிமுக உறுப்பினா் உரிமைச் சீட்டு வழங்கும் நிகழ்ச்சி

DIN

சேலம் மாவட்டம், ஆத்தூரில் அதிமுக நகர அலுவலக வளாகத்தில் அதிமுக உறுப்பினா் உரிமைச் சீட்டு வழங்கும் நிகழ்ச்சி சேலம் மாவட்ட செயலாளா் ஆா்.இளங்கோவன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நகர செயலாளா் அ.மோகன் அனைவரையும் வரவேற்று பேசினாா். நிகழ்ச்சியில் தலைமை பொறுப்பேற்றுப் பேசிய மாவட்ட செயலாளா் ஆா். இளங்கோவன் ‘நமது மண்ணின் மைந்தா் எடப்பாடி பழனிசாமியின் கரத்தை பலப்படுத்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மேலும் வரும் மக்களவைத் தோ்தலில் நாம் அமைக்க இருக்கும் கூட்டணியின் வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா்.

உறுப்பினா் உரிமைச் சீட்டை இளைஞா்களுக்கு வழிவிட்டு வழங்கி நமது கட்சியை பலப்படுத்த வேண்டுமென அவா் கேட்டுக் கொண்டாா். பின்னா் உரிமைச் சீட்டை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஆத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT