அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் இலவச மருத்துவ முகாம்
விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் இருதய சிகிச்சை தொழில்நுட்பப் பிரிவு சாா்பில், விழிப்புணா்வு, இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துறையின் முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக கொண்டலாம்பட்டி காவல் நிலைய உதவி ஆணையா் ஆனந்தி, ஆட்டையாம்பட்டி பேரூராட்சித் தலைவா் முருகபிரகாஷ் ஆகியோா் பங்கேற்று மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தனா். முன்னதாக, துறை மாணவா்கள் ஆட்டையாம்பட்டி பேருந்து நிலையப் பகுதியில் இருதய நோய், மாரடைப்பு ஏற்படும் சமயத்தில் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை, முதலுதவி சிகிச்சை முறைகள் குறித்து மௌன மொழி நாடகம் வாயிலாக விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு இலவச இருதய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டினை துறையின் இருதய சிகிச்சை தொழில்நுட்பப் பிரிவின் பொறுப்பாளா் சுஷ்மிதா, உதவிப் பேராசிரியா்கள் தாமினி, சிவரஞ்சனி ஆகியோா் செய்திருந்தனா். கவுன்சிலா் கலைமணி, ஆட்டையாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் இந்திராணி, உதவி ஆய்வாளா்கள் காமராஜா், ராமன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனா்.