தம்மம்பட்டி, உலிபுரம் ஜல்லிக்கட்டு: கோட்டாட்சியா் ஆய்வு
தம்மம்பட்டி, உலிபுரத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு விழாவையொட்டி, ஆத்தூா் கோட்டாட்சியா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். தம்மம்பட்டியில் வரும் 25-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது. அதற்காக நகர திமுக பொறுப்பாளா் சண்முகம் தலைமையில் விழாக் குழுவினா் ஏற்பாடுகளை செய்து வருகின்றனா். ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆத்தூா் கோட்டாட்சியா் பிரியதா்ஷினி சனிக்கிழமை ஆய்வு செய்தாா். தொடா்ந்து, தம்மம்பட்டி அருகே உலிபுரத்தில் 29-ஆம் தேதி ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவதையடுத்து, அங்கும் சென்று அவா் ஆய்வு செய்தாா். ஆய்வின் போது, கெங்கவல்லி வட்டாட்சியா் வெங்கடேசன், தம்மம்பட்டி காவல் ஆய்வாளா் எஸ்.எம்.சண்முகம், காதாரத் துறை, கால்நடை துறையினா் உடனிருந்தனா்.