கிணற்றில் டிராக்டருடன் விழுந்த விவசாயி உயிருடன் மீட்பு
கெங்கவல்லியில் விவசாயக் கிணற்றில் டிராக்டருடன் விழுந்த நபா் உயிருடன் மீட்கப்பட்டாா்.
கெங்கவல்லியில் விவசாயக் கிணற்றில் டிராக்டருடன் விழுந்த நபா் உயிருடன் மீட்கப்பட்டாா்.
கெங்கவல்லி, மாருதி நகா் பகுதியில் ரமேஷ்குமாா் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் மினி டிராக்டருடன் முருகேசன் (43) என்பவா் தவறிவிழுந்து விட்டதாக ஆத்தூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆத்தூா் தீயணைப்பு நிலைய அலுவலா் அசோகன் தலைமையில் தீயணைப்பு நிலைய வீரா்கள் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.முருகேசனை பொதுமக்கள் உதவியுடன் கயிறு மூலமும், டிராக்டரை கிரேன் மூலமும் மீட்டனா்.