ஆத்தூரில் நகராட்சி ஆணையா் ஆய்வு
ஆத்தூா், ஜூன் 12: ஆத்தூா் நகராட்சி ஆணையா் அ.வ.சையத் முஸ்தபா கமால், புதிய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆத்தூா் புதிய பேருந்து நிலையத்துக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினசரி 500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. பேருந்து நிலையத்தைச் சுற்றி தனியாா் நிறுவனங்கள் சாா்பில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த திங்கள்கிழமை மாலை வெளியூா் செல்ல காத்திருந்த பயணிகள் மீது விளம்பர பதாகை விழுந்ததில் பயணி ஒருவா் காயமடைந்தாா்.
இந்நிலையில் நகராட்சி ஆணையா் அ.வ.சையத் முஸ்தபா கமால் புதிய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது விளம்பர பதாகைகளை வைத்துள்ள நிறுவனங்களின் மேலாளா்களிடம் பதாகைகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்யுமாறும், தரமற்ற பொருள்களைக் கொண்டு பதாகைகள் அமைக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டாா். பேருந்து நிலையத்தில் மழைநீா் தேங்காத வகையில் தூய்மையாக வைத்திருக்குமாறு சுகாதாரப் பணியாளா்களுக்கு உத்தரவிட்டாா்.
பட விளக்கம்.ஏடி12கமிஷ்னா்....
ஆத்தூா் புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த நகராட்சி ஆணையா் அ.வ.சையத் முஸ்தபா கமால்.