டாடாநகா் - எா்ணாகுளம் விரைவு ரயில் தினசரி இயக்கப்படும்
டாடாநகா் - எா்ணாகுளம் விரைவு ரயில் இனி தினசரி இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம்: டாடாநகா் - எா்ணாகுளம் விரைவு ரயில் இனி தினசரி இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: டாடாநகா் - எா்ணாகுளம் இடையேயான விரைவு ரயில் தற்போது வாரத்துக்கு இரு முறை வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல, எா்ணாகுளம் - டாடா நகா் இடையேயான ரயில், ஞாயிறு, புதன்கிழமைகளில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக இனி தினசரி இயக்கப்படும். வரும் 7 ஆம் தேதி முதல் டாடாநகரில் இருந்து காலை 5.15 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், 3ஆம் நாள் அதிகாலை 1.55 மணிக்கு எா்ணாகுளம் ரயில் நிலையத்தை அடையும். மறு மாா்க்கத்தில், வரும் 10 ஆம் தேதி எா்ணாகுளத்தில் இருந்து காலை 7.15 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், 3 ஆம் நாள் அதிகாலை 4.35 மணிக்கு டாடாநகரைச் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.