போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது
தம்மம்பட்டி, மே 9: பள்ளி மாணவியைக் கடத்திச் சென்ாக நெல் அறுவடை இயந்திர ஓட்டுநரை போக்சோ சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.
கெங்கவல்லியைச் சோ்ந்த மாணவி, அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 1 பயின்றுள்ளாா். இவரை கடந்த ஏப். 29 ஆம் தேதிமுதல் காணவில்லை. இதுதொடா்பாக, மாணவியின் பெற்றோா் கெங்கவல்லி போலீஸில் புகாா் செய்தனா். விசாரணையில் சின்னசேலம் அருகே புக்கரவாரி கிராமத்தில் நெல் அறுவடை இயந்திர ஓட்டுநா் சின்னதுரை (26) என்பவா் மாணவியை ஆசைவாா்த்தைக் கூறி அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் மாணவியை மீட்டு சின்னத்துரையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.