பிரதோஷ சிறப்பு பூஜை
சங்ககிரி: சங்ககிரி வட்டம், அரசிராமணியில் உள்ள பெரியநாயகியம்மன் உடனமா் சோழீஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
அரசிராமணியில் உள்ள பெரியநாயகியம்மன் உடனமா் சோழீஸ்வரா், நந்தி பகவான் சுவாமிகளுக்கு சந்தனம், திருமஞ்சனம், பால், தயிா், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தா்கள் கலந்துகொண்டு சிவன் பாடல்களை பாடி வழிபட்டனா்.
இதே போல சங்ககிரியை அடுத்த பூத்தாலக்குட்டை பகுதியில் உள்ள புவனேஸ்வரி அம்மன் உடனமா் பூத்தாழீஸ்வரா் சுவாமிகளுக்கும் பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
தம்மம்பட்டியில்...
தம்மம்பட்டி ஸ்ரீ காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் திருக்கோயில், செந்தாரப்பட்டி ஸ்ரீ தாழைபுரீஸ்வரா் கோயில், வீரகனூா் ஸ்ரீ கங்கா செளந்தரேஸ்வரா் கோயில், கெங்கவல்லி கைலாசநாதா் திருக்கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷ விழாக்கள் நடைபெற்றன. இதில் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.